Saturday 27th of April 2024 12:37:14 AM GMT

LANGUAGE - TAMIL
.
சபாநாயகர் உள்ளிட்ட நாடாளுமன்ற நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 463 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

சபாநாயகர் உள்ளிட்ட நாடாளுமன்ற நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 463 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை!


சபாநாயகர் உள்ளிட்ட நாடாளுமன்ற நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 463 பேரிடம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான உயிரியல் மாதிரிகள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் தரப்பில் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாடாளுமன்ற பணிக்குழுவினருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்றைய தினம் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற நிர்வாக்க குழு உறுப்பினர்கள் என 463 பேரிடம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான உயிரியல் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் நாளையும், நாளை மறுதினமும் இந்நடவடிக்கை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE